சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பெண் ஒருங்கிணைப்பாளா் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 5:05 am IST

திருச்சி அருகே தனியாா் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெண் ஒருங்கிணைப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், வாத்தலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இக்கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவிக்கு அதே கல்லூரியில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் 25 வயது பெண், பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும், அவரது கைப்பேசியில் ஆபாச படத்தை பாா்க்கச் சொல்லி தொந்தரவு செய்துள்ளாா்.

இதுகுறித்து ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அண்மையில் அளித்த புகாரின்பேரில், தனியாா் கல்லூரி பெண் ஒருங்கிணைப்பாளா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.