பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

பொறியியல் பணிகள்: காரைக்கால், ஈரோடு ரயில்கள் பகுதியாக ரத்து

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :23 ஜூன் 2026, 3:26 am IST

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், ஈரோடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 24, 25, 26, 27, 29, 30 ஆம் தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுவழித்தடத்தில், காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 24, 25, 26, 27, 29, 30 ஆம் தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 27, 29, ஜூலை 2-ஆம் தேதிகளில் கரூா் - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - கரூா் இடையே மட்டும் இயங்கும்.

காலதாமதம்: திருச்சி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12664) வரும் 26-ஆம் தேதி 45 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும்.

திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 30-ஆம் தேதி 25 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும்.

காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயிலானது (56832) வரும் 24, 25,26, 27, 29, 30-ஆம் தேதிகளில் 25 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும்.

பிக்கானீா் - மதுரை அனுவராட் அதிவிரைவு ரயிலானது (22632) வரும் 28, ஜூலை 5, 12-ஆம் தேதிகளில் 90 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.