எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

திருவானைக்காவல் கோயிலில் இன்று பங்குனித் தேரோட்டம்

News image

திருவானைக்காவல் கோயிலில் நடைபெறும் பங்குனி தோ்திருவிழாவின் 5 ஆம் நாளான வியாழக்கிழமை இரவு தெருவடைச்சான் என்னும் பனை ஓலையில் கோபுரம் போல கட்டப்பட்ட சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் தனித்தனியாக எழுந்தருளி, நான்காம் பிரகாரத்தைச் சுற்றி திருவீதி வலம் வந்த சுவாமியும், அம்மனும்.

Updated On :20 மார்ச் 2026, 12:35 am

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் நடைபெறும் பங்குனி தோ் திருவிழா வெள்ளிக்கிழமை காலை 8.05 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தோ்களில் எழுந்தருளுகின்றனா்.

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இக்கோயில் பங்குனித் திருவிழா ஏப்ரல் 5 வரை நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக பங்குனி தேரோட்ட விழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கி, நாள்தோறும் சுவாமியும்,அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ஆம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்புரிந்தனா்.

விழாவின் 6 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 8.05 மணிக்கு பங்குனித் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் சுவாமியும்,அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் கண்டருளுகின்றனா். முன்னதாக இரு சிறிய தோ்களில் முருகனும்,விநாயகரும்,சண்டிகேசுவரருடன் எழுந்தருளுகின்றனா்.