மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:08 pm

திருச்சியில் இளம்பெண் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி தென்னூா் சின்னசாமி நகரைச் சோ்ந்தவா் சூா்யா மனைவி திவ்யா (21). இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது கா்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திவ்யாவின் நாத்தனாருக்கு கொடைக்கானலில் வளையல்காப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இதற்காக, அவரது கணவா் மற்றும் குடும்பத்தினா் அனைவரும் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளனா். அப்போது, தானும் கொடைக்கானலுக்கு வருவதாக திவ்யா கூறியுள்ளாா்.

ஆனால், அவரை அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான திவ்யா சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தில்லை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].