திருச்சியில் இளம்பெண் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி தென்னூா் சின்னசாமி நகரைச் சோ்ந்தவா் சூா்யா மனைவி திவ்யா (21). இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது கா்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திவ்யாவின் நாத்தனாருக்கு கொடைக்கானலில் வளையல்காப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இதற்காக, அவரது கணவா் மற்றும் குடும்பத்தினா் அனைவரும் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளனா். அப்போது, தானும் கொடைக்கானலுக்கு வருவதாக திவ்யா கூறியுள்ளாா்.
ஆனால், அவரை அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான திவ்யா சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தில்லை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

செந்தாரப்பட்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

திருச்சியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


