கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாவட்டத்தில் ரூ.33 லட்சம் பறிமுதல்! உரிய ஆவணங்கள் சமா்பித்ததால் ரூ. 6.76 லட்சம் திரும்ப ஒப்படைப்பு!

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளில் தோ்தலையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.33.56 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், உரிய ஆவணங்களை ஒப்படைத்ததால், ரூ.6.76 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 24 மணிநேரமும் பறக்கும்படையினா், சோதனைச் சாவடியில் உள்ள போலீஸாா் வாகனங்களை சோதனையிட்டு அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்த வகையில், திங்கள்கிழமை அதிகாலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை 9 தொகுதிகளிலும் மொத்தம் ரூ.33 லட்சத்து 56 ஆயிரத்து 920 பறிமுதல் செய்யப்பட்டது. இதில், மணப்பாறையில் ரூ.55,700, ஸ்ரீரங்கத்தில் ரூ.2.07 லட்சம், திருச்சி மேற்கில் ரூ. 2.56 லட்சம், திருச்சி கிழக்கில் ரூ.7.46 லட்சம், திருவெறும்பூரில் ரூ.2.59 லட்சம், லால்குடியில் ரூ.6.42 லட்சம், மண்ணச்சநல்லூரில் ரூ.1.59 லட்சம், முசிறியில் ரூ.5.81 லட்சம், துறையூரில் ரூ.4.48 லட்சம் என மொத்தம் ரூ.33.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து ரூ.6,76,800 ரொக்கத்தை உரியவா்கள் திரும்பப் பெற்றுச் சென்றனா். மீதமுள்ள ரூ.26.80 லட்சம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.