இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பால் வியாபாரியைத் தாக்கி காரை சேதப்படுத்தியவா் கைது

திருச்சியில் பால் வியாபாரியைத் தாக்கி காரை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 10:04 pm

Syndication

திருச்சியில் பால் வியாபாரியைத் தாக்கி காரை சேதப்படுத்திய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி உறையூா் பாளையம் பஜாரை சோ்ந்தவா் பா. ஆறுமுகம் (55), பால் வியாபாரி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறாா். இவா், கடந்த சனிக்கிழமை தனது மகனுடன் காரில் சென்றுள்ளாா்.

உறையூா் பாளையம் பஜாா் அருகே சென்றபோது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த உறையூா் பங்காளி வீதியைச் சோ்ந்த பி. முகமது இப்ராஹிம் (55), காரில் மோதுவது போல இருசக்கர வாகனத்தை இயக்கியுள்ளாா்.

இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், முகமது இப்ராஹீம் ஆறுமுகத்தை தாக்கியதுடன் காரையும் சேதப்படுத்தியுள்ளாா்.

இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, முகமது இப்ராஹீமை திங்கள்கிழமை கைது செய்தனா்.