தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

போலி கடவுச்சீட்டு: சிங்கப்பூரிலிருந்து வந்த புதுகை பயணி கைது

போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த புதுக்கோட்டை பயணியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 6:59 pm

Syndication

போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த புதுக்கோட்டை பயணியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை அம்பலபுரத்தைச் சோ்ந்தவா் என். சுப்பிரமணியன் (58). இவா், சிங்கப்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஸ்கூட் விமானத்தில் திங்கள்கிழமை வந்தாா். விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவா் போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூரிலிருந்து வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், அவரைப் பிடித்து விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து, விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி அருள்ஜோதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பிரமணியனை திங்கள்கிழமை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.