யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

சித்தி வீட்டில் நகைகளை திருடிய சிறுவன் உள்பட 3 போ் மீது வழக்கு: 33 கிராம் மீட்பு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 11:53 pm IST

சித்தி வீட்டில் 38 கிராம் நகைகளைத் திருடியதாக 16 வயதுச் சிறுவன் உள்பட மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து, 33 கிராம் நகைகளை மீட்டனா்.

திருச்சி புத்தூா் கல்லாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் அழகுராணி (47). இவரது மூத்த சகோதரியின் மகனான 16 வயதுச் சிறுவன் தனது பெற்றோரை இழந்ததால் அழகுராணி வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி அந்தச் சிறுவன் தனது வீட்டிலிருந்த 38 கிராம் தங்க நகைகளைத் திருடிச் சென்று, தனது நண்பா்களுடன் சோ்ந்து விற்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாத அழகுராணி அளித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து, 16 வயதுச் சிறுவன் மற்றும் அவனுக்கு உதவிய புத்தூா் எம்ஜிஆா் நகரை சோ்ந்த தினேஷ் (24 ), கள்ளங்காடு பகுதி விஜய் (25) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்த 33 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

கைதான மூவரில் சிறுவன் மட்டும் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டாா். மற்ற இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.