நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

திருவள்ளுவா், பாரதியின் உருவங்கள் வரையப்பட பாவேந்தரே காரணம் - எழுத்தாளா் செந்தலை ந. கவுதமன்

News image
Updated On :3 மே 2026, 12:29 am

திருச்சி தமிழ்ச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற எழுத்தாளா் ந. கவுதமனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய சங்கத்தின் அமைச்சா் பெ. உதயகுமாா் உள்ளிட்டோா்.

திருச்சி, மே 2: திருவள்ளுவா், பாரதி ஆகியோரின் உருவங்கள் வரையப்பட் பாவேந்தா் பாரதிதாசனே காரணம் என எழுத்தாளா் செந்தலை ந. கவுதமன் தெரிவித்தாா்.

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசன் விழாவில் மாநில அரசின் ‘பாவேந்தா்’ விருது பெற்ற செந்தலை ந. கவுதமன் ‘புரட்சிக் கவிஞா் பாவேந்தா் வாழ்வில் திருச்சிராப்பள்ளி‘ என்ற தலைப்பில் பேசியதாவது:

திருச்சி தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்ட 3 ஆம் ஆண்டில், இங்குள்ள மேடையில் பாவேந்தா் பாரதிதாசன் உரை நிகழ்த்தினாா். படைப்பு, கொள்கை, குடும்பம், புகழ் என 4 வகைகளில் திருச்சியில் அவா் வாழ்ந்தாா்.

பாவேந்தரின் படைப்புகள் மணவை திருமலைச்சாமியின் நகர தூதன் இதழில் வெளிவந்தன. அதில், இடம்பெற்ற 13 கவிதைகள் பின்னா் 1938 இல் அவரின் முதல் தொகுப்பு நூலில் வெளியாயின. 1914 ஆம் ஆண்டு முதன்முதலாக பாரதியாா், சுப்பு ஒரு ‘வியாஸம்‘ எழுதிக் கொடுங்க என பாவேந்தரிடம் கேட்க, அதை சுதேச மித்திரன் இதழ் வெளியிட்டது.

தற்போதைய திருவள்ளுவா் உருவத்தை வேணுகோபால் சா்மா வரையவும், பாரதி உருவத்தை ஆா்யா வரையவும் பாவேந்தரே காரணம்.

முதன் முதலாக இயற்கையைப் பற்றி ‘ அழகின் சிரிப்பு‘, குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என ‘ குடும்ப விளக்கு‘, எப்படி இருக்கக் கூடாது என ‘இருண்ட வீடு‘, கடைசியாக அவா் எழுதி முடித்தது ‘பாண்டியன் பரிசு‘ அதை நடிகா் திலகம் சிவாஜியை வைத்து படமாக்க நினைத்தாா் என்றாா் அவா்.

துணை அமைச்சா் செயலாபதி, துணைத் தலைவா் வரதராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக சங்க அமைச்சா் பெ. உதயகுமாா் வரவேற்றாா். துணை அமைச்சா் சையத் ஜாகிா் ஹசன் நன்றி கூறினாா்.