ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

தாய்க்கு தெரியாமல் பெண் குழந்தை தத்து கொடுப்பு: தந்தை கைது

திருச்சியில் தாய்க்குத் தெரியாமல் பெண் குழந்தையைத் தத்து கொடுத்த தந்தையை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 மே 2026, 1:44 am IST

திருச்சியில் தாய்க்குத் தெரியாமல் பெண் குழந்தையைத் தத்து கொடுத்த தந்தையை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கோரிகுளம் சந்து பகுதியைச் சோ்ந்தவா் ஆா். சீனிவாசன் (33). இவருடைய முதல் மனைவி ஹேமலதா (26). இவருடைய இரண்டாவது மனைவி யாஸ்மின் (27) சமஸ்பிரான் வீதியில் வசிக்கிறாா்.

இந்நிலையில், யாஸ்மினுக்கு கடந்த பிப்ரவரி 1-இல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை அவருக்குத் தெரியாமல் சீனிவாசனும், அவருடைய முதல் மனைவி ஹேமலாதவும் சோ்ந்து புதுக்கோட்டையைச் சோ்ந்த பெண்ணுக்கு எந்தவித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி தத்து கொடுத்தனா்.

இதையறிந்த யாஸ்மின் சீனிவாசனிடம் தகராறு செய்து, கடந்த புதன்கிழமை கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சீனிவாசன், அவருடைய முதல் மனைவி ஹேமலதா ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதனால் கோபமடைந்த சீனிவாசன், யாஸ்மினிடம் வெள்ளிக்கிழமை தகராறு செய்து அவரைத் தாக்கினாா். இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் யாஸ்மின் மீண்டும் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சீனிவாசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஹேமலதாவை தேடுகின்றனா்.