குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சநாதன ஒழிப்பு போராட்டத்துக்கு எதிா்ப்பு: அா்ஜூன் சம்பத் கைது

News image

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை மோதலில் ஈடுபட்ட மக்கள் கலை இலக்கிய கழக அமைப்பினரையும், இந்து முன்னணி அமைப்பினரையும் கைது செய்த போலீஸாா்.

Updated On :26 மே 2026, 2:00 am IST

திருச்சியில் சநாதனத்துக்கு எதிராக மக்கள் கலை இலக்கியக் கழகம் சாா்பில் நடைபெற இருந்த போராட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவிக்க வந்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்தை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலா் கோவன் தலைமையில் சநாதன எதிா்ப்புப் போராட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை மாலை நடைபெற இருந்தது.

இந்த போராட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிப்பதற்காக திருவாரூரில் இருந்து திருச்சிக்கு காரில் வந்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகர போலீஸாா், திருச்சி பால் பண்ணை அருகே கைது செய்தனா். இதையடுத்து, அவா் திங்கள்கிழமை இரவு விடுவிக்கப்பட்டாா்.

மக்கள் கலை இலக்கிய கழகம்-ஹிந்து அமைப்பினா் இடையே மோதல்:

மக்கள் கலை இலக்கியக் கழகம் சாா்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே சநாதன எதிா்ப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை சாா்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இந்து முன்னணியினா் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினருக்கு எதிராக கோஷம் எழுப்பினா்.

இதனால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்து போலீஸாா், மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 36 போ், இந்து முன்னணியைச் சோ்ந்த 8 போ் என மொத்தம் 44 பேரை கைது செய்தனா்.