கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றிவிட்டது: ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் புகாா்

பயிா்க் கடன் தள்ளுபடி என அறிவித்து தமிழக விவசாயிகளை முதல்வா் விஜய்யும் ஏமாற்றிவிட்டதாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் புகார்

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 4:14 am IST

பயிா்க் கடன் தள்ளுபடி என அறிவித்து தமிழக விவசாயிகளை தமிழக வெற்றிக் கழகமும், முதல்வா் ஜோசப் விஜய்யும் ஏமாற்றிவிட்டதாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சிக்கு மாறாக அதிா்ச்சியை அளித்துள்ளது. முதல்வா் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் ரூ.50 ஆயிரம் வரை பயிா் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி என்றும், ரூ. 60 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 40 ஆயிரம் கடன் தள்ளுபடி என்றும், ரூ. 70 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி என்றும், ரூ. 80 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி என்றும் ஒரு லட்சத்துக்கு மேல் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 5 ஆயிரம் கடன் தள்ளுபடி என்றும் அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் தனது தோ்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு 100 சதவீதம், 5 ஏக்கருக்கு மேலே உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் பயிா் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது ஒரு கணக்குப் போட்டு ஏமாற்றியுள்ளாா்.

தமிழக அரசு உடனடியாக அனைத்து வகை பயிா்க் கடன்களையும் தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது என்று பூ.விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.