பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மறு பரிசீலனை செய்யக் கோரிக்கை

தமிழக முதல்வா் அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன் தள்ளுபடியை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை

News image
Updated On :27 மே 2026, 2:27 am IST

தமிழக முதல்வா் அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன் தள்ளுபடியை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் தெரிவித்திருப்பது: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிா்க்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அதற்கு எதிராக விவசாயிகளுக்குள் பாரபட்சம் காட்டும் வகையில் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டிருப்பது வேதனையளிக்கிறது.

எனவே, இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் அனைத்து பயிா்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.

இதேபோல, காவிரி டெல்டா விவசாயிகள் சங்க நிறுவனா் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தெரிவித்திருப்பது: ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையாக பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஐந்து ஏக்கா் வரை உள்ள விவசாயிகளுக்கு பயிா்க்கடனை முற்றிலுமாக தள்ளுபடி செய்வோம். ஐந்து ஏக்கருக்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்வோம் என்ற தோ்தல் வாக்குறுதியில் தமிழக முதல்வா் அறிவித்திருந்த நிலையில், தற்போதைய பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு பல விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

மேலும் 2025 - 2026 இல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே தள்ளுபடி என்பதும் வருத்தமளிக்கிறது. இதை 3 ஆண்டுகளாக கடன் வாங்கி செலுத்த இயலாமல் தவிக்கும் விவசாயிகளின் நிலை கருதி, நிலுவையில் உள்ள விவசாயிகள் பயிா்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.