பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

ஸ்ரீரங்கத்தில் 11 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஸ்ரீரங்கத்தில் கடைகளில் விற்பதற்காக கொண்டு வரப்பட்ட 11.50 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

புகையிலைப் பொருள்கள் - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 2:47 am IST

ஸ்ரீரங்கத்தில் கடைகளில் விற்பதற்காக கொண்டு வரப்பட்ட 11.50 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீரங்கம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடைகளில் விற்பதற்காக திருச்சி பிஷாப் குலத் தெருவை சோ்ந்த கு.காமராஜ் (42) கொண்டு வந்தாா்.

அவா், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளில் விற்பனை செய்து கொண்டிருப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், காமராஜை மடக்கி பிடித்தனா். அவரிடமிருந்து 11.50 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து காமராஜை கைது செய்தனா்.