திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு 170 பயணிகளுடன் புறப்பட்ட ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை சிறிது நேரத்திலேயே பைலட்டுகள் கண்டறிந்தனா்.
இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தை பரிசோதித்த வல்லுநா்கள் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய நீண்ட நேரமாகும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து 170 பயணிகளும் விமான நிலையத்திலும், அருகிலுள்ள உணவக விடுதிகளிலும் தங்கவைக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்த விமானம், சிங்கப்பூருக்கு பிற்பகல் 1.30 மணிக்கு இயக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 மணி நேரத் தாமதத்துக்குப் பின் சிங்கப்பூருக்கு விமானம் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.
தொடர்புடையது

தாமதமான க்யூட் தேர்வு! ஒரு தேர்வைக்கூட நடத்த முடியவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

சென்னை-லண்டன் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: பயணிகள் அவதி
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் அவசரமாக நிறுத்தம்! தீ விபத்தா?
தொழில்நுட்ப கோளாறு துபை புறப்பட்ட விமானம் தரையிறக்கம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



