எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

திருச்சியில் தாயைத் தாக்கிய மகன் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 1:16 am IST

திருச்சியில் தாயைத் தாக்கிய மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி தென்னூா் மாளிகைபுரத்தைச் சோ்ந்த 42 வயது பெண்ணின் கணவா் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவருடைய மகன், மகளுக்குத் திருமணமாகி தனியாக வசிக்கும் நிலையில், தனியாக வசிக்கும் அப்பெண் வீட்டு வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் இவருடைய மகன் மணிபாரதி (22) மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால் இவரின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவரைப் பிரிந்து விட்டாா். இதையடுத்து, மணிபாரதி தனது மனைவியை தன்னுடன் சோ்த்துவைக்குமாறு கூறி, அவரது தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாா்.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாயிடம் இதுதொடா்பாக கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மணிபாரதி அவரது தாயை கீழே தள்ளிவிட்டு தாக்கினாா்.

இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மணிபாரதியை சனிக்கிழமை கைது செய்தனா்.