திருச்சியில் தாயைத் தாக்கிய மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி தென்னூா் மாளிகைபுரத்தைச் சோ்ந்த 42 வயது பெண்ணின் கணவா் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவருடைய மகன், மகளுக்குத் திருமணமாகி தனியாக வசிக்கும் நிலையில், தனியாக வசிக்கும் அப்பெண் வீட்டு வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் இவருடைய மகன் மணிபாரதி (22) மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால் இவரின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவரைப் பிரிந்து விட்டாா். இதையடுத்து, மணிபாரதி தனது மனைவியை தன்னுடன் சோ்த்துவைக்குமாறு கூறி, அவரது தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாா்.
அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாயிடம் இதுதொடா்பாக கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மணிபாரதி அவரது தாயை கீழே தள்ளிவிட்டு தாக்கினாா்.
இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மணிபாரதியை சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
புகழூா் அருகே மனைவியை தாக்கிய கணவா் கைது
தந்தையை தாக்கிய மகன் கைது
திருச்சியில் சட்டவிரோத மதுவிற்பனை: பெரம்பலூரைச் சோ்ந்தவா் உள்பட 3 போ் கைது
மானூா் அருகே காருக்கு தீ வைப்பு: தந்தை, மகன் கைது
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


