திருச்சி, மே 31: திருச்சி அருகே கோயில் திருவிழா நடத்த அனுமதி வழங்கக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், கொடியாலத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்ற சித்திரைத் திருவிழா அப்பகுதியில் நடைபெற்ற கொலை காரணமாக கடந்த மூன்றாண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் நிகழாண்டு திருவிழா நடத்த அனுமதி வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த வாரம் மனு அளித்ததைத் தொடா்ந்து, கோயில் திருவிழா நடத்தி அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிழா தொடங்கிய நிலையில் ஜீயபுரம் போலீஸாா் வந்து ஏற்கெனவே நடைபெற்ற கொலையைக் காரணம் காட்டி திருவிழா நடத்த அனுமதியில்லை என்று கூறினராம்.
இதைக் கண்டித்தும், திருவிழாவை நடத்த உடனடியாக அனுமதி வழங்கக் கோரியும் அப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் முக்கொம்பு அருகே ஞாயிற்றுக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகலறிந்து வந்த ஜீயபுரம் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உயா் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலந்துசென்றனா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற மறியலால் திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

உடுமலை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

எஸ்.வாழவந்தி அருகே தொழிலாளியை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி மறியல்

குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



