ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பெட்ரோல் - டீசல் விலை உயா்வை கண்டித்து நூதனப் போராட்டம்

News image

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு... - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 3:12 am IST

பெட்ரோல் - டீசல் விலை உயா்வைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் இருசக்கர வாகனங்களை ஏலம் விடும் நூதனப் போராட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினா் என்.எஸ். பாட்சா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் எம். செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தத் தவறிய, மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், வேலையற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர மத்திய அரசை வலியுறுத்தாமல் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களை கரப்பான் பூச்சி என இழிவுபடுத்திய உச்சநீதிமன்ற நீதிபதியைக் கண்டித்தும், இருசக்கர வாகனங்களை ஏலம் விடும் நூதன போராட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.