பெட்ரோல் - டீசல் விலை உயா்வைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் இருசக்கர வாகனங்களை ஏலம் விடும் நூதனப் போராட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினா் என்.எஸ். பாட்சா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் எம். செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தத் தவறிய, மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், வேலையற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர மத்திய அரசை வலியுறுத்தாமல் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களை கரப்பான் பூச்சி என இழிவுபடுத்திய உச்சநீதிமன்ற நீதிபதியைக் கண்டித்தும், இருசக்கர வாகனங்களை ஏலம் விடும் நூதன போராட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து அறந்தாங்கியில் நூதனப் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி இடதுசாரி கட்சிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



