திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

"வள்ளுவரையும், வள்ளலாரையும் பற்றினால் நல்வாழ்வு'

நாள்தோறும் வள்ளுவரையும், வள்ளாலரையும் பற்றி பேசுவோருக்கு நல்வாழ்வு அமையும் என்றார் வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலைய தலைவர் ஊரன் அடிகளார்.

Published On :25 ஜனவரி 2024, 11:56 am IST

நாள்தோறும் வள்ளுவரையும், வள்ளாலரையும் பற்றி பேசுவோருக்கு நல்வாழ்வு அமையும் என்றார் வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலைய தலைவர் ஊரன் அடிகளார்.
அரியலூர் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலைய வளாகத்தில்,தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில் அவர் மேலும் பேசியது:
கடந்த 19 ஆம் நூற்றாண்டில் வடலூரில் சத்தியஞானசபை,சத்திய தருமசாலை என இரண்டையும் உருவாக்கினார் வள்ளலார். தமிழகத்தில் வள்ளுவரையும்,வள்ளலாரையும் பற்றி பேசியவர்கள் வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர்.
வள்ளலார் வடலூர் வரும் முன்பே,அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன்பே வடலூர், லிங்கத்தடிமேடு ஆகிய பகுதிகளில் சிவாலயம் இருந்துள்ளதாகத் தெரிகிறது. காலப்போக்கில் அவை சிதிலமடைந்ததாகத் தெரிகிறது. புனிதமான  இப்பகுதிகளில் வள்ளலார் சத்தியஞான சபை,வள்ளலார் கல்வி நிலையம் ஆகியவை உருவாக்கியுள்ளார். அருட்செல்வமும் பொருட்செல்வமும் நிரம்பப் பெற்ற இத்தகைய உயர்ந்த மேடையில் ராமலிங்க வள்ளல் ஆன்மநெறிக் கழகம் தொடங்கப்படுகிறது. கல்வி நிலையங்கள் உருவாக்கியதில் முருகானந்த அடிகளாரின் பங்கும் குறிப்பிடத்தக்கது என்றார் அவர். முன்னதாக அவர் நாவுக்கரசர் சோ. சத்தியசீலன் எழுதிய இலக்கியம் பேசும் இலக்கியம் என்ற புத்தகத்தை வெளியிட, தொழிலதிபர் அக்பர் ஷெரீப் பெற்று கொண்டார். சோ.சத்தியசீலன் ஏற்புரையாற்றினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தமிழ்த் துறை தலைவர் அரங்க பாரி புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். வள்ளலாரும் தமிழ் பண்பாடும் என்ற தலைப்பில், தமிழ்ப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி பேசினார். விழாவுக்கு வள்ளலார் கல்வி நிலைய தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.