சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ஜயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன்கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
Updated on
1 min read

ஜயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன்கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
 ஜயங்கொண்டம் கழுமலைநாதர்,  சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர்,   மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர்,
திருக்களப்பூர் திருக்கோடிவனத்தீஸ்வரர், புதுச்சாவடி
கல்யாணசுந்தரேஸ்வரர்,   மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவமங்கலம் பால்வண்ணநாதர், திருத்துளார் அருளுடையநாதர், வீரசோழபுரம் கைலாசநாதர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், தூத்தூர் வராகமுத்தீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
 இதையொட்டி, நந்தியம்பெருமானுக்கு திரவியப்பொடி, மஞ்சள்,
சந்தனம், பால், தேன் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
 மேலும், ஜயங்கொண்டம் கழுமலைநாதர் கோயில், கங்கைகொண்டசோழபுரம்   பிரகதீஸ்வரர் கோயில்களில் நந்தியம்பெருமானின் பிரகார உலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com