கீழப்பழுவூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கீழப்பழுவூரில் ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் ஆண்டுதோறும் 50 மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று வந்தனர். கடந்தாண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அனுப்ப சொன்னதால், 36 மாணவர்கள் சேர்ந்தனர். இதனைக் காரணம் காட்டி பயிற்சி நிறுவனத்தில் இந்த ஆண்டு சேர்க்கை நடத்தாமல் பெரம்பலூரில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் சேர அழைக்கப்படுகிறது.
பொருளாதாரம், கல்வியில் மிகவும் பின்தங்கிய அரியலூர்- பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது பயிற்சி நிறுவனம் ஆரம்பித்து சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், பெரம்பலூரில் படிக்க வேண்டும் என்பதை கைவிட்டு, அரியலூரில் பயிற்சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







