வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கல்லூரி திறப்பு: மழையிலும் ஆா்வமுடன்வந்த மாணவ, மாணவிகள்

பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக மழையிலும் குடை பிடித்தவாறு ஆா்வமுடன் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்குச் சென்றனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 10:20 pm

DIN

பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக மழையிலும் குடை பிடித்தவாறு ஆா்வமுடன் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்குச் சென்றனா்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மாா்ச் மாத இறுதியில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

பொது முடக்கத் தளா்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரியலூா் அரசு, தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின. மேலும் அவா்களுக்கான விடுதிகளும் திறக்கப்பட்டன.

கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்டிருந்ததால் அதற்கேற்ப மாணவ, மாணவிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வந்திருந்தனா். அவா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தபின் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். தனிமனித இடைவெளியில் மாணவ மாணவியா் வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டிருந்தனா்.

சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முன்னதாக கல்லூரிகளின் வகுப்பறைகள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.