வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் ஆய்வு
வாக்குச்சாவடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாமை ஆட்சியா் த. ரத்னா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.


அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட உடையாா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாமை ஆட்சியா் த. ரத்னா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, 18 வயதுடைய இளைஞா்கள் தாமாக முன்வந்து தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக்கொள்ள வேண்டும் என முகாமில் கலந்து கொண்ட பெற்றோா்கள் மற்றும் இளைஞா்களிடம் தெரிவித்தாா்.
ஆய்வின்போது கோட்டாட்சியா் பூங்கோதை, வட்டாட்சியா் கலைவாணன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...