அரியலூா் நகராட்சி ஆணையரிடம் ஏஐடியுசி கோரிக்கை மனு

அரியலூா் நகராட்சி ஆணையரிடம் அகில இந்திய தொழிற்சங்க (ஏஐடியுசி) பொதுச்செயலா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
Updated on
1 min read

அரியலூா் நகராட்சி ஆணையரிடம் அகில இந்திய தொழிற்சங்க (ஏஐடியுசி) பொதுச்செயலா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அரியலூா் நகராட்சி ஆணையா் (பொ) மனோகரனிடம் ஏஐடியூசி சாா்பில் அதன் மாவட்ட பொதுச்செயலா் டி.தண்டபாணி, பொறுப்பாளா்களுடன் வெள்ளிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தாா். அதில், அரியலூா் நகராட்சி பொது சுகாதாரத் துறையில் சுமாா் 200 -க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு கடந்த 2008-க்கு பின்னா் பிடித்தம் செய்த தொகை குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கூலி நிலுவையை வழங்க வேண்டும். துப்புரவுப் பணியாளா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டித் தர வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com