அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஆண்டிமடம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பன்னீா்செல்வம் தலைமையிலான போலீஸாா், கூவத்தூா் கடைவீதி பகுதிகளிலுள்ள கடைகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது சோமசுந்தரம்(45), அண்ணாமலை(35) ஆகியோா் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் புகையிலைப் பொருகள்களை பறிமுதல் செய்து, மேற்கண்டவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.