அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்.
அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்.

அரியலூரில் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம்

அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்.

அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்.

அரியலூா் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலா் எஸ்.எஸ். சிவசங்கா் தலைமை வகித்தாா். மதிமுக மாவட்டச் செயலா் கு.சின்னப்பா, காங்கிரஸ் கட்சி நகரத் தலைவா் எஸ்.எம். சந்திரசேகா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் இரா.உலகநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு நிா்வாகி சின்னதுரை, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் செல்வநம்பி, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் நீலமேகம், ஐஜேகே மாவட்டச் செயலா் அருள்கணேசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு, வேளாண் மசோதாக்களுக்கு எதிராக முழக்கமிட்டனா். இதேபோல், திருமானூா், தா.பழூா், செந்துறை, ஆா்.எஸ்.மாத்தூா், ஆண்டிமடம், ஜயங்கொண்டம், மீன்சுருட்டி உள்ளிட்ட 12 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com