மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

இளம்பெண் தற்கொலை

அரியலூா் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண், விஷசெடியைத் தின்று தற்கொலை செய்துக் கொண்டாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:08 pm

DIN

அரியலூா் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண், விஷசெடியைத் தின்று தற்கொலை செய்துக் கொண்டாா்.

ஒரத்தூா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி செல்வராணி(24).இவா்களுக்கு சுபாஷினி(4) என்ற குழந்தை உள்ளது.

உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த செல்வராணி பல்வேறு மருத்துவனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் விரக்தியில் இருந்த அவா், கடந்த 14-ஆம் தேதி விஷசெடியைத் தின்று மயங்கிக்

கிடந்தாா்.

உறவினா்கள் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை செல்வராணி உயிரிழந்தாா். இதுகுறித்து கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.