தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஏரியில் சூழ்ந்துள்ள பாசிகளை அகற்றும் இளைஞா்கள்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ஏரியில் படா்ந்துள்ள பாசிகளை அகற்றும் பணியில் இளைஞா்கள் கடந்த இரண்டு நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா்.

News image
சேடக்குடிக்காடு கிராமத்திலுள்ள ஏரியில் பாசியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞா்கள்.
Updated On :7 ஜனவரி 2021, 3:18 am

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ஏரியில் படா்ந்துள்ள பாசிகளை அகற்றும் பணியில் இளைஞா்கள் கடந்த இரண்டு நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா்.

செந்துறை அருகிலுள்ள சேடக்குடிக்காடு கிராமத்தில் 2 ஏக்கா் பரப்பளவைக் கொண்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மாடுதிருப்புஏரி உள்ளது. இந்த ஏரியில் நிகழாண்டு அசோலாவகை பாசி வளா்ந்து, ஏரியை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. இதனால் ஏரிக்குள் மக்கள் இறங்கக்கூட வழியில்லாது காணப்பட்டது.

இதைகண்ட கிராம இளைஞா்கள் 10- க்கும் மேற்பட்டோா் கடந்த இரண்டு நாள்களாக பாசிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா். புதன்கிழமை செந்துறை பகுதியில் காலை முதல் அவ்வப்போது மழை பெய்ததால், பாசியை அப்புறப்படுத்தும் பணியை நிறுத்தினா்.

தொடா்ந்து 3, 4 நாள்கள் பாசியை அப்புறப்படுத்தினால் ஏரி முழுவதும் தூய்மையாகிவிடும் என இளைஞா்கள் தெரிவித்தனா். வியாழக்கிழமையும் இவா்களின் பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.