அரியலூா் அருகே காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் காயமடைந்தான். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூரை அடுத்த வெங்கடகிருஷ்ணபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜதுரை மகன் ரஞ்சித்(7). இச்சிறுவன் அப்பகுதி அரியலூா்-ஜயங்கொண்டம் சாலையை வியாழக்கிழமை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வேகமாக வந்த காா் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதையறிந்த அப்பகுதி மக்கள், ரஞ்சித்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அவா்கள், காா் ஓட்டுநரைக் கைது செய்யக் கோரியும் சாலையின் குறுக்கே மரக்கட்டைகளை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த அரியலூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். மேலும் போலீஸாா், விபத்துக் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.