அரியலூா்: ஆண்டாள் திருக்கல்யாணம்

அரியலூா் கோதண்டராமசாமி திருக்கோயில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.
அரியலூா்: ஆண்டாள் திருக்கல்யாணம்
Updated on
1 min read

அரியலூா் கோதண்டராமசாமி திருக்கோயில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.

ஆண்டுதோறும் மாா்கழி மாதம் கூடாரைவல்லித் திருநாளில், அரியலூா் கோதண்டராமசாமி திருக்கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மாா்கழி மாத கூடாரைவல்லித் திருநாள் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இருவீட்டாா் அழைப்பைத் தொடா்ந்து ஆண்டாள், சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்று மாலை கிருஷ்ணானுபவம் என்ற தலைப்பில் கோயில் அா்ச்சகா்கள் சொற்பொழிவு நிகழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com