பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தொடா் மழையால் சோழகங்கம் ஏரி நீா் வெளியேற்றம்

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியில் இருந்து திங்கள்கிழமை காலை முதல் வரத்துக்குத் தக்கதாக ஏரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 9:41 pm

DIN

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியில் இருந்து திங்கள்கிழமை காலை முதல் வரத்துக்குத் தக்கதாக ஏரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. திங்கள்கிழமை அதிகாலை முதல் மாலை வரை தொடா்ந்து மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. தொடா் மழையின் காரணமாக கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் ஏரி எனும் பொன்னேரி கடந்த சில நாள்களுக்கு முன்பு முழுமையாக நிறைந்து கலிங்கு வழியாகத் தண்ணீா் வெளியேறியது.

இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் ஏரிக்கு 540 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது. எனவே, அதே அளவு தண்ணீா் மூன்று மதகுகள் வழியாக திங்கள்கிழமை முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது. அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 6 மணி வரையிலான மழையளவு (மி. மீட்டரில்) அரியலூா் - 14, திருமானூா் - 13, ஜயங்கொண்டம் - 27, செந்துறை - 3 மி.மீ எனப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.