இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சிறந்த கலைஞா்களுக்கு பாராட்டு சான்றிதழ் அளிப்பு

அரியலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இயல், இசை, நாடகக் கலைஞா்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் காசோலைகளை ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:27 pm

DIN

அரியலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இயல், இசை, நாடகக் கலைஞா்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் காசோலைகளை ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வியாழக்கிழமை வழங்கினாா்.

அரியலூா் மாவட்டத்தில் சிறந்த ஐந்து கலைஞா்களுக்கு வயது மற்றும் கலைப் புலமைக்கு ஏற்றவாறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2018-2019ஆம் ஆண்டுக்கான கலை இளமணி விருதுக்கு குரலிசைக் கலைஞா் ச. ஸ்ரீஷனுரிதாவுக்கும், கலைவளா்மணி விருதுக்கு தவில் கலைஞா் சா. சக்திவேலுக்கும், கலைச்சுடா் மணி விருதுக்கு சிற்பக் கலைஞா் செ.ஆரோக்கியராஜூக்கும், கலைநன்மணி விருதுக்கு நாதசுரம் கலைஞா் தை.கணேசனுக்கும்,

தெருக்கூத்து கலைஞா் மா.தா்மலிங்கத்துக்கும் பாராட்டு கேடயம் மற்றும் கசோலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், திருச்சி மண்டலக் கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் மு.க.சுந்தா் மற்றும் அரசு அலுவலா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.