இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த...

அரியலூா் வட்டாரத்தில் சுமாா் 6,500 எக்டா் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு பூக்கும் தருணத்தில் உள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:26 pm

DIN

அரியலூா் வட்டாரத்தில் சுமாா் 6,500 எக்டா் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு பூக்கும் தருணத்தில் உள்ளது.

தற்போது நிலவி வரும் குளிரான தட்பவெப்ப நிலையின் காரணமாக வீழ் படைப்புழுக்களின் தாக்குதல் ஒரு சில இடங்களில் தென்படுகிறது. இதனை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்காக மெட்டாரைசியம் என்ற பூஞ்சான கலவையை ஒரு லிட்டா் தண்ணீரில் 8 கிராம் என்ற அளவில் கலந்து காலை, மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும் அல்லது ஸ்பைனிட்டோரம் என்ற பூச்சிக்கொல்லியினை லிட்டருக்கு 0.5 மி.லி என்ற அளவில் தெளித்து இப்பூச்சியைக் கட்டுப்படுத்தி அதிக லாபம் பெறலாம் என வேளாண் உதவி இயக்குநா் ஆ.சாந்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.