சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

மாட்டு வண்டி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை முயற்சி

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே மணல் குவாரி தொடங்க வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாட்டு வண்டி தொழிலாளி மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருகிறாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:55 pm

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே மணல் குவாரி தொடங்க வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாட்டு வண்டி தொழிலாளி மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருகிறாா்.

தா.பழூா் அருகேயுள்ள உதயநத்தம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (40). மாட்டுவண்டி தொழிலாளி. இவா், மணல் குவாரி திறக்கக் கோரி ஜயங்கொண்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். தொடா்ந்து, இரவு 10 மணியளவில், மாட்டு வண்டி மணல் குவாரியை அரசு உடனடியாகத் தொடங்கி, மாட்டு வண்டித் தொழிலாளா்களின் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் கொண்டே, தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டாா். இதையடுத்து,அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பாஸ்கா் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறாா்.

இவா், ஏற்கெனவே சட்டவிரோதமாக மணல் அள்ளிய வழக்கில் இவரது மாட்டு வண்டி தா. பழூா் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.