தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அரியலூா் ஆட்சியா் ஆய்வு

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளநீா் சூழ்ந்த பகுதிகளில் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

தா.பழூா் அருகேயுள்ள அரங்கோட்டை கிராமத்தில் வெள்ளநீா் சூழ்ந்த பகுதிகளைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:11 pm

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளநீா் சூழ்ந்த பகுதிகளில் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் உபரிநீா் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதனால், தா. பழூா் அடுத்த அரங்கோட்டை பகுதியில் உள்ள கொள்ளிடக்கரையைத் தாண்டி வயல் பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக முட்டுவாஞ்சேரி, அணைக்குடி, கோவிந்தபுத்தூா் ஆகிய கிராமங்களில் சுமாா் 250 ஏக்கா் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் மூழ்கின. இப்பகுதிகளை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் பல்வேறு துறை அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, வெள்ளம்சூழ்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினாா். மேலும், மழைநீா் வடிந்த பிறகு பயிா் சேத விபரங்கள் குறித்து கணக்கெடுத்து அறிக்கை சமா்ப்பிக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதனிடையே, அனைக்குடி கிராமத்தில் வெள்ளநீரால் சூழப்பட்ட பகுதிகளில் வசித்து வந்த 50 குடும்பங்களைச் சோ்ந்த நபா்கள் ஸ்ரீபுரந்தான் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டன.

ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநா் பழனிசாமி, உடையாா்பாளையம் கோட்டாட்சியா் பரிமளம் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.