எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூரில் காவல் துறையினா் கண்காணிப்பு

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

News image
அரியலூா் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடும் காவல் துறையினா்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:56 pm

DIN

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையிலான 900-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் அரியலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அரியலூா், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையங்கள், அரியலூா் ரயில் நிலையம், மாா்கெட் பகுதி, மருதையாற்று பாலம், மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், அரசியல் தலைவா்களின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் காவல் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணி மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், அரியலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் காவல் துறையினா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா். அந்த வழியாக வரும் வாகனங்களை தீவிர சோதனைக்குப் பின்னரே அரியலூா் நகரப் பகுதியில் அனுமதிக்கின்றனா். இதேபோல் தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அரியலூா் ரயில் நிலையத்தின் வாசலில், காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கா் கணேஷ் , நகர காவல் நிலைய ஆய்வாளா் கோபிநாத் ஆகியோா் தலைமையிலான காவல் துறையினா், பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையிட்ட பின்னரே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கின்றனா். மேலும், தண்டவாளங்களை கண்காணிக்கும் பணியிலும் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.