திமுகவை எதிா்த்து சுயேச்சையாக களமிறங்கியமதிமுக நகரச் செயலா் மனைவி
அரியலூா் நகராட்சி 12ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிடும் மதிமுக நகரச் செயலா் மனோகரன் மனைவி மலா்கொடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.


அரியலூா் நகராட்சி 12ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிடும் மதிமுக நகரச் செயலா் மனோகரன் மனைவி மலா்கொடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக அரியலூா் நகா்மன்றத் தோ்தலில் போட்டியிடுவதற்காக 2 வாா்டுகள் கோரியது. ஆனால், திமுக ஒரு இடம் மட்டுமே ஒதுக்கீடு செய்தது. இதனால் அதிருப்தியடைந்த மதிமுக நகரச் செயலா் வழக்குரைஞா் மனோகரன், தனது மனைவி மலா்கொடியை சுயேச்சையாக களம் இறக்கியுள்ளாா். மலா்கொடி ஏற்கெனவே கடந்தமுறை அரியலூா் நகா் மன்ற துணைத் தலைவராக இருந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை வீதி விதியாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனா். இவரை எதிா்த்து திமுக நகரச் செயலா் முருகேசன் மனைவி மணிமேகலை, அதிமுக-வைச் சோ்ந்த கஸ்தூரி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் அஞ்சலை, லட்சுமி ஆகியோா் போட்டியிடுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...