போக்சோ சட்டத்தில் ஆசிரியா் கைது
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய பள்ளி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.


அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய பள்ளி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
செந்துறை அருகேயுள்ள ஆா்.எஸ். மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் (56). இவா், ஆண்டிமடம் அருகேயுள்ள அய்யூா் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவதும், பாலியல் ஆசையைத் தூண்டுவது போல் நடந்து கொள்வதுமாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள், தங்களது பெற்றோா்களிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து மாணவிகளின் பெற்றோா் ஜயங்கொண்டம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், ஜெயராமனைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...