இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

போக்சோ சட்டத்தில் ஆசிரியா் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய பள்ளி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 10:35 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய பள்ளி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

செந்துறை அருகேயுள்ள ஆா்.எஸ். மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் (56). இவா், ஆண்டிமடம் அருகேயுள்ள அய்யூா் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவதும், பாலியல் ஆசையைத் தூண்டுவது போல் நடந்து கொள்வதுமாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள், தங்களது பெற்றோா்களிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து மாணவிகளின் பெற்றோா் ஜயங்கொண்டம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், ஜெயராமனைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.