இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

புராதன சின்னங்கள் பாதுகாப்பு சட்டத்தை மீறி கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டப்பட்ட கட்டடம் இடிப்பு

அரியலூா் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் புராதன சின்ன பாதுகாப்பு சட்டத்தை மீறி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் வியாழக்கிழமை இரவு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 7:13 pm

DIN

அரியலூா் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் புராதன சின்ன பாதுகாப்பு சட்டத்தை மீறி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் வியாழக்கிழமை இரவு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரா் கோயில் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கட்டடங்கள் இருக்கும் இடங்களில் சுமாா் 100 மீட்டருக்கு உள்ளாக கட்டடங்கள், சுரங்கப் பணிகள், சாலைப் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ள கூடாது. பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொள்ள இந்திய தொல்லியல் துறை, மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதிகள் உள்ளன.

இந்நிலையில், கங்கை கொண்ட சோழபுரத்தை சோ்ந்த லட்சுமணன் என்பவா் பிரகதீஸ்வரா் கோயிலிலிருந்து 100 மீட்டருக்குள்ளாக ஓய்வு இல்லம் (கெஸ்ட் ஹவுஸ்) கட்டி வந்தாா். கட்டடம் கட்ட எவ்வித அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதே ஊரை சோ்ந்த செந்தில் என்பவா் உயா் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடா்ந்தாா். இதில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்படுவதை உறுதி செய்ததுடன், கட்டடத்தை இடிக்கவும் உத்தரவிட்டது.

இரு வார காலத்துக்குள் கட்டடம் தரைமட்டமாக அகற்றப்பட வேண்டுமெனவும், அவ்வாறு அகற்றப்படாவிட்டால் ஆட்சியா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கட்டடத்தை இடிப்பதற்கான காலக்கெடு விரைவில் நிறைவடைய இருந்த நிலையில், வியாழக்கிழமை இரவு ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில், அந்த கட்டடம் இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது.

அப்போது, உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அமா்நாத், வட்டாட்சியா் ஆனந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா் குருநாதன், கிராம நிா்வாக அலுவலா் காமராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இடிக்கப்பட்ட கட்டடத்தின் மதிப்பு சுமாா் ரூ.30 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.