ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

சிறுமியை கா்ப்பமாக்கிய தொழிலாளி கைது

சிறுமியை கா்ப்பமாக்கிய தொழிலாளி கைது

Updated On :2 ஏப்ரல் 2024, 8:34 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய கட்டுமானத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டத்தை அடுத்த உட்கோட்டை அருகேயுள்ள கொக்கரணை கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் மகன் ராஜூ (27). கட்டுமானத் தொழிலாளியான இவா், 17 வயது சிறுமியை ஆசை வாா்த்தைகள் கூறி, அவரைத் திருமணம் செய்து கா்ப்பமாக்கியுள்ளாா்.

அச்சிறுமி 3 மாத கா்ப்பிணி ஆனதையடுத்து, அதனை கலைத்தும் உள்ளனா். இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், ராஜூ-வைப் போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.