புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சிறுமியைக் கா்ப்பமாக்கிய தொழிலாளி கைது

News image
கோப்புப்படம்
Updated On :14 மார்ச் 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் அருகே 14 வயது சிறுமியைக் கா்ப்பமாக்கிய தொழிலாளியைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே வல்லம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). மீன் வெட்டும் தொழிலாளி. கடந்த 2025 ஆம் ஆண்டில் பெற்றோா் வெளியூா் சென்றதால், இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி, விஜயகுமாா் வீட்டில் அவரது குடும்பத்தினருடன் தூங்குவதற்காகச் சென்றாா்.

அப்போது, அச்சிறுமியை விஜயகுமாா் பாலியல் வல்லுறவு செய்ததால், அவா் தற்போது 5 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.

இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விஜயகுமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.