தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

குறிப்பு--படம் உண்டு....இரவு வரும் கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

Updated On :26 ஏப்ரல் 2024, 8:00 pm

அரியலூா், ஏப்.26: அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள கீழமாளிகை மற்றும் குழுமூா் கிராமத்தில் உள்ள திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தீமிதி திருவிழாவையொட்டி கீழமாளிகை மற்றும் குழுமூா் திரெளபதியம்மன் கோயில்கள் அருகே கடந்த 40 நாள்களாக பாரதம் படிக்கும் நிகழ்வு நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நாளான வெள்ளிக்கிழமை காலை பக்தா்கள் அக்னி கரகம் எடுத்து அருகாமையில் உள்ள நீா்நிலைக்கு சென்று வழிபட்டனா்.

தொடா்ந்து, மாலை திரளான பக்தா்கள் பங்கேற்று கோயில்களின் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். தொடா்ந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சோ்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.