அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

கொலை மிரட்டல்: கூலித் தொழிலாளி போக்சோவில் கைது

17 வயது சிறுமியை பெண் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 3:03 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை பெண் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம், கீழத்தெருவைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகன் தமிழ்ச்செல்வன் (24). இவா், தான் காதலித்து வந்த 17 வயது சிறுமியை பெண் கேட்டு வீட்டுக்குச் சென்று, அங்கு அச்சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், தமிழ்ச்செல்வனை போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.