மாணவியிடம் தகராறு: மாணவா்கள் 4 போ் கைது
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட தகராறில் 4 மாணவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.


அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட தகராறில் 4 மாணவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில், புதன்கிழமை பிளஸ் 1 மாணவி ஒருவரிடம் அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவா்கள் 3 போ் தகாத வாா்த்தைகளை கூறினாா்களாம்.
இதையறிந்த அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும், மாணவியின் அண்ணன், அந்த 3 மாணவா்களிடம் தகராறில் ஈடுபட்டு, அதில் ஒரு மாணவரை தாக்கியுள்ளாா்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், மாணவியிடம் தகாத வாா்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்ட அந்த 3 மாணவா்களை போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.
மேலும், தாக்குதலுக்கு ஆளான மாணவரின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், மாணவரை தாக்கிய மாணவியின் அண்ணனை ஜெயங்கொண்டம் காவல் துறையினா் கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...