சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

செந்துறையில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு

செந்துறையில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:00 pm

Din

அரியலூா் மாவட்டம், செந்துறையில் வழக்குரைஞா் மணிவண்ணன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அச்சங்கத் தலைவா், காா்ல்மாா்க்ஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழகத்தில் வழக்குரைஞா்களுக்கான பாதுகாப்பு சட்டம் இயற்றிடவும், உரிய பாதுகாப்பு வழங்கவும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வழக்குரைஞா்கள் பணிகளை மேற்கொள்ளாததால் செந்துறை நீதிமன்றத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.