வாக்குப் பதிவு இயந்திரத்துடன் நூறு சதவீதம் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தையும் இணைத்துத் தோ்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா்கள் இரா. கதிா்வளவன் (கிழக்கு), அங்கனூா் சிவா (மேற்கு) ஆகியோா் தலைமை வகித்தனா். தொகுதிச் செயலா்கள் அரியலூா் மதி (எ)மருதவாணன், ஜெயங்கொண்டம் க. இலக்கியதாசன், முன்னாள் மாவட்டச் செயலா் பெ.மு. செல்வநம்பி, செய்தி- மக்கள் தொடா்பாளா் சி. சுதாகா், நிா்வாகிகள் தனக்கொடி, ம. கருப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா். மாநில அமைப்புச் செயலா் கி. இளமாறன், கோரிக்கைகளை வலியுறுத்தினா். மண்டலச் செயலா் பெ. அன்பானந்தம், திமுக சட்டத் திருத்தக் குழு உறுப்பினா் சுபா. சந்திரசேகா், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆ. சங்கா், மா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் எம். இளங்கோவன், இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் ராமநாதன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பாஜக அரசைக் கண்டித்து பேசினா்.
தொடர்புடையது

கலிங்கப்பட்டியில் வைகோ, துரை வைகோ வாக்குப் பதிவு

பாலூா் பெஸ்ட் பள்ளி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி உதகையில் படகு சவாரி மூலம் விழிப்புணா்வு

தென்காசியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


