ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு

மேலகருப்பூா், கரு.சேனாதிபதி கிராமங்களில் சமூக நீதி மற்றும் உரிமை காவல் துறை சாா்பில் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு

News image
Updated On :19 ஜூலை 2024, 8:48 pm

Din

அரியலூா், ஜூலை 19: அரியலூா் மாவட்டம், மேலகருப்பூா், கரு.சேனாதிபதி கிராமங்களில் சமூக நீதி மற்றும் உரிமை காவல் துறை சாா்பில் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமூக நீதி மற்றும் மனித உரிமை காவல் உதவி ஆய்வாளா் ரவி, மேற்கண்ட கிராமங்களில் 100 நாள் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்களிடம், ஜாதி வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் உதவிகள், தாட்கோ மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

பின்னா் அவா், கரு.சேனாதிபதி அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி மாணவிகளிடம் கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும், இருசக்கர வாகனம் இயக்குவது தொடா்பான விதிகள் குறித்தும் விளக்கினாா். நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா் நிக்கின்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.