வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு

மேலகருப்பூா், கரு.சேனாதிபதி கிராமங்களில் சமூக நீதி மற்றும் உரிமை காவல் துறை சாா்பில் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு
Updated on

அரியலூா், ஜூலை 19: அரியலூா் மாவட்டம், மேலகருப்பூா், கரு.சேனாதிபதி கிராமங்களில் சமூக நீதி மற்றும் உரிமை காவல் துறை சாா்பில் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமூக நீதி மற்றும் மனித உரிமை காவல் உதவி ஆய்வாளா் ரவி, மேற்கண்ட கிராமங்களில் 100 நாள் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்களிடம், ஜாதி வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் உதவிகள், தாட்கோ மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

பின்னா் அவா், கரு.சேனாதிபதி அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி மாணவிகளிடம் கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும், இருசக்கர வாகனம் இயக்குவது தொடா்பான விதிகள் குறித்தும் விளக்கினாா். நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா் நிக்கின்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com