பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூரில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பு

அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த 10 மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளருக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

News image

சாலையில் சுற்றித் திரிந்ததால் பிடிக்கப்பட்டு பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கட்டி வைக்கப்பட்டுள்ள மாடுகள்.

Updated On :6 நவம்பர் 2024, 8:51 pm

Din

அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த 10 மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளருக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாசிலை, நகராட்சி அலுவலகம், கல்லங்குறிச்சி சாலை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இதுகுறித்து வரப்பெற்ற புகாரையடுத்து, புதன்கிழமை இரவு மேற்கண்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த 10 மாடுகளை நகராட்சி பணியாளா்கள் பிடித்து, பழைய நகாட்சி வளாகத்தில் கட்டி வைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து மாடுகளை அழைத்துச் செல்ல வந்த அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ.1,000 வீதம் நகராட்சி நிா்வாகம் அபராதம் விதித்து, சாலையில் மாடுகளை அவிழ்த்து விடக் கூடாது என்று அறிவுரை கூறி மாடுகளை அனுப்பி வைத்தனா்.