வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

சென்னை சம்பவத்துக்கு எதிா்ப்பு: மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

News image

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள்.

Updated On :14 நவம்பர் 2024, 9:46 pm

Din

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், மருத்துவா் பாலாஜி மீதான கொலை வெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன் மருத்துவா்கள், புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மருத்துவா் பாலாஜி மீது தாக்குதல் நடத்தியவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவா்களுக்கான பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

இதில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவச் சங்க மாவட்டத் தலைவா் கொளஞ்சிநாதன் தலைமை வகித்தாா். ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை மருத்துவ அலுவலா் பானுமதி தலைமை வகித்தாா்.